Thursday, 19 October 2017

அரக்கர்கள் Syndrome எனப்படும் விசித்திர மன நோய்


திராவிடம் கடவுள் மறுப்பு கொள்கையுடையது, ஆனால் தமிழ் வரலாற்றில் ஆயிரம் வருடம் பின் சென்றால் எந்த சோழன், பாண்டியனாக இருந்தாலும் இறை வழிப்பாட்டில் ஈடுபட்டிருப்பர், அதனால் அப்படி பட்ட அரசர்கள், தமிழ் இனத்திற்கான அவர்களின் பங்களிப்பு அனைத்தையும் புறக்கணிப்பதா?

திராவிடம் பரிணாம வளர்ச்சி கொள்கையுடையது, தமிழகமோ கோவில்கள் நிறைந்த நாடு. Space time physics'ஐ தாண்டி quantum physical states'ஐ புரிந்து செயல்பட்ட சித்தர்கள் நமக்கு கொடுத்ததுதான் Holistic சித்த மருத்துவம், ஆசீவகம், Martial arts எல்லாமே.  
திராவிடர்கள் பாராட்டும் அல்லோபதி மருத்துவம் முதலாளித்துவத்தின் ஆணிவேர்

திராவிடம் ஜாதி ஒழிப்பு கொள்கையுடையது : உலகில் எல்லா மனிதர்களுக்கும் எல்லா நாட்டவருக்கு இருப்பது போல் தமிழர்களுக்கும் குடும்ப பெயர்களின் நீட்சியான குலப்பெயர்கள் இருக்கும். 

இணக்கமாக வாழ்ந்த சமூகத்தில் ஆரியன்  கொண்டு வந்த வர்ணாஸ்ரம தர்மம்  திணிக்கப்பட்டதால், மக்கள் வரலாறு மறந்து வர்ணாஸ்ரமத்தை பயன்படுத்தியதால், இன்றளவும் அதை சார்ந்தே  திராவிட கட்சிகள் அரசியல் செய்த்து வருவதால், ஜாதி அடிப்படையிலே வேட்பாளர்களை நிறுத்தி அந்த ஜாதிய கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதால், ஆம் தமிழர்கள்  ஜாதி வெறியர்கள் போலும் , திராவிடர்கள் மட்டுமே பகுத்தறிவாளர்கள்.

தமிழரில் தாழ்ந்த ஜாதி உயர்ந்த ஜாதி இல்லை, ஆனால் பூர்வகுடிகள் அடையாளமாக குலப்பெயர்கள் இருக்கின்றன. வந்தேறிகள் குலப்பெயர்களை மறக்காமல் இருக்கும்போது, பூர்வகுடிகள் இருக்க கூடாதா ? 

வைகோ கேரளா முதல்வருக்கு எழுதும் கடிதத்தில் பெரியாரின் ஜாதி பெயரை சேர்த்து எழுதி புளங்காகிதம்  அடைகையில், வந்தோரை வாழவைத்த தமிழனுக்கு குலப்பெயரை வைத்து கொள்ள உரிமை இல்லையா ?  

சங்ககாலத்திலேயே அகநானூறு படைத்து  காதல் வளர்த்தவன் தமிழன். பெரிய கோவிலின் கட்டுமானத்தில் பங்கேற்ற அனைத்து ஜாதிகளையும் அழைத்து கௌரவித்தவன் தமிழ் மன்னன். 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னது பெரியாரா? யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடியது பெரியாரா? 

திராவிடம் மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது:
அகழ்வாராய்ச்சி நடக்கின்ற கீழடியை  மூடினாலும், ஆதிச்சநல்லூரை மூடினாலும் தமிழ் மொழியே ஒரு காலப்பெட்டகம் போன்றது. சொல்லியல் நிபுணர்கள் வரலாற்று நூல்களிலிருந்து காப்பியங்களிலிருந்து தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க முடியும். மா சோ விக்டர், ஒரிசா பாலு , அறிஞர் குணா போன்றோர் இத்துறையில் உள்ளவர்களே. 

தமிழன் ஹிந்து என்று யார் சொன்னது ?

உண்மை தமிழ் வரலாறை ஆராய்ச்சி செய், வீடுபேறு அடைதல் என்ற மானுடம் போற்றும் வாழ்வியலை உலகிற்க்கே அளித்தவன் தமிழன். எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்று வாக்கு அரசியல் செய்பவனல்ல, எல்லோரும் கடவுள் ஆகலாம் என்று ஆன்மிகம் போதித்தவன் தமிழன். 

படைப்பவன் காப்பவன் அழிப்பவனெல்லாம் ஹிந்து கதைகளில் வருபவை. எந்த கடவுள் யாரை மணந்தார் , எத்தனை  குட்டி கடவுள்களை பெற்று போட்டார் என்பன போன்ற ஹிந்து கதைகளை  வைத்து கொண்டு தமிழனை கேலி செய்யாதே. 

தமிழன் மட்டும்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும், அதை மறுப்பவன்தான் உண்மையில் இனவாதி என்று தெளிவாக சொல்லும் பலரும், மெரினா மணலில் தனித்தமிழ்நாடு தனி ஈழம் கேட்டு பலாகைகள் பிடித்ததற்காக தீவிரவாதி பெயரை வாங்கிக்  கொண்ட இளைஞர்களும், மொழி ஆய்வாளர்களும், ஓயாமல் குரல் கொடுக்கும் இணையதள போராளிகளும், 
அரசியல் நிலைப்பாடு இல்லாமல் வெறும் தமிழன் என்ற அடிப்படையில் நில வேம்பு கசாயத்தை போன்ற மரபு வைத்தியத்தை பின்பற்றி ஆங்கில மருத்துவம் என்னும் முதலாளித்துவத்தை நொறுக்கும் சிலரும், 
பாரிசாலன் போன்ற புது வகை போராளிகளும், 
இன்ன பிறரும் தினம் தினம் முளைப்பதை யாராலும் தடுக்க முடியாது. 

Star wars என்ற படத்தில் வரும் Return of the Jedi பாகத்தை போல சித்தரின் காலம் மீண்டும் தமிழகத்தில் ஆரம்பிக்கும். தமிழரும் தன் விடுதலைக்காக secret society அமைத்து குறியீடுகள் பயன்படுத்தினால் கூட ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. எதிரியை பொறுத்தே நம் போராட்டம் அமையும்.  

அனைவரும் தமிழரே என்று சாமர்த்தியமாக திராவிடம் பேசும் தமிழர்களின் கண்கள் பெரியாரின் தாடிக்குள் இருந்தால் காப்பாற்ற இயலாது. 

உலகுக்கே விடுதலை தரவேண்டிய சமூக பொறுப்பு இருக்கிறது நமக்கு. நமது இன விடுதலை மட்டுமில்லாமல் பல தேசிய  இனங்களின் விடுதலைக்காகவும் போராட வேண்டும். கொஞ்சம் சிந்தித்து பார்த்தல் தெரியும், காஷ்மீர் விடுதலைக்காகவும், காத்தலோனியா , குர்டிஸ்தான் விடுதலை பற்றியும் , ஐரோப்பிய ஒன்றியத்தில் தேசியங்களின்  ஆட்சி , கூட்டாட்சி தத்துவம் பற்றி எல்லாம் அதிகம் சிந்திப்பது தமிழ் தேசியவாதிகள் தான். 

தமிழர்கள் ட்ராவிடத்திற்காக உழைப்பது கரையான்கள் உழைத்து பாம்பிற்கு கோட்டை அமைத்து கொடுக்கும் வேலை. கருப்பு சட்டை அணிவித்து  நம்மை போராளி போல் பெருமைப்பட வைத்து  நம்மை சுரண்டி சாப்பிட்டு , குழிதோண்டி புதைத்து விடுவான் திராவிடன்.

திராவிடர் என்பது பக்கத்து மாநில மக்களோ, தமிழகத்தில் வாழும் வேற்று மொழியினரோ இல்லை. அவர்களை முறையாக கன்னடர் மலையாலி தெலுங்கர் மராட்டியர் என்று மரியாதையுடன் அழைக்க வேண்டும்.

தமிழரை ஏய்த்து பிழைப்பதையே கொள்கையாக கொண்டு தமிழகத்தின் வளங்களை அழித்து, தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் வேற்று இனத்தவரை மட்டும்தான் இந்த திராவிட அடையாளம் குறிக்கும். தமிழ் தேசியவாதிகள் இத்தகைய திராவிடர்களை மட்டும்தான் எதிர்க்கிறோம்.

தமிழன் அரக்கன் இல்லை, அது ஆரியன் தமிழனுக்கு கொடுக்கும் அடையாளம், உளவியல் போர். அந்த அடையாளத்தையே பெருமையாக வாங்கிக்கொண்டு, ஆமாண்டா நாங்க அரக்கர்கள்தான்டா என்று முட்டாள்களை போல கொக்கரிப்பது திராவிடம்.  

நான் இங்க பூர்வ குடி, நீ என்னை வஞ்சித்து வாழும் வந்தேறி என்று, முறையாக வரலாறை கோரியும், ஆரியர்களால் திருடப்பட்ட தமிழரின் ஆன்மிக கலாச்சாரத்தையும் மீட்டு, சுத்தப்படுத்துவதே தமிழனின் கடமை.

பகுத்தறிவு என்பது பெரியார் எனப்படுபவரால் எழுதப்பட்ட ஒரு இலக்கண புத்தகமோ, மத நூலோ இல்லை. முதலில் பெரியாரை பகுத்து அரி, பின்பு உலகை பகுத்தறியலாம்.

Monday, 16 October 2017

நிலவேம்பு கஷாயம் என்னும் திராவிடத்தின் எதிரி .

நிலவேம்பு கஷாயம் டெங்குவிற்கும் திராவிட மாயையை போக்குவதற்கும் சிறந்த மருந்தாகும்.

கள்ளுக்கடை மறியல் என்றால்

கள்ளுக்கடைகளை  புறக்கணிக்கலாம்,
கல்  இறங்குவதை தவிர்க்கலாம்,
500 தென்னை மரங்களை வெட்டி வேரோடு புடிங்கி எரிபவன் யாராக இருக்க முடியும்?  
பகுத்தறிவாளனா

நமது பிரச்சனை திராவிடம் கூட இல்லை , திராவிட மாயையில் சிக்கி உள்ள தமிழர்கள்தான்

"ஆரிய எதிர்ப்பு என்று நமக்கு ஒரு எதிரியை முன்னிறுத்தி பூச்சாண்டி காட்டுதலும், 
தமிழ் காட்டுமிராண்டி மொழி, 
தமிழ் சமூகம் பெண்களை அடிமைப்படுத்தி வந்தது,
ஆன்மிகம் என்றால் ஆரிய ஹிந்துக்களின் படைப்பு "

என்பதுபோன்ற உளவியல் கட்டமைப்பை தமிழர் மீது திணிப்பது தான் திராவிட மாயை

உரிமையை மீட்டெடுப்பவன் தமிழன் , நமக்கு அது தேவையில்லை என்று தமிழரை ஏமாற்றி தமிழரின்  உரிமைகளை புறக்கணிப்பவன் திராவிடன்.

தமிழ் மரபிலும் மருத்துவம், கட்டடக்கலை, வானியல் என்று அனைத்து அறிவும் உள்ளது என்பதை புறக்கணிப்பது.

தமிழன் என்றாலே முட்டாள், மூடப்பழக்கம் நிறைந்தவன் என்று பட்டம் கட்டுவது.

ட்ராவிடன்தான் டார்வின்'ன் சகலையாயிற்றே, சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். 

ஆன்மிகம், அறிவியல் இரண்டிலும் உரிமை கோருபவன் தமிழன். தமிழன் தன்  உரிமைகளை மீட்டெடுத்தால் உலகமே அதிரும். டெங்கு கொசுக்கு தீர்வு சொன்னாலே உனக்கெப்படி இவ்ளோ அறிவு , நீ மூடன் என்று சண்டைக்கு வருகிறார்கள் திராவிடர்கள்.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபொது , 
தமிழ்நாட்டை பலவீனமாக்க சில முக்கிய ஊர்களை தாரைவார்த்து கொடுத்தது, 
பூர்வகுடி தமிழர்களை சேரிகளில் தவிக்கவிட்டது
சேரிகளை சீரமைக்கிறேன் என்று  அம்மக்களை அவர்களின் விருப்பமில்லாமல் புலம்பெயர்ப்பது.
பொதுவுடைமை என்ற கம்யூனிசம் பேசுவது ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கு கட்சியில் பதவி தராதிருப்பது
தமிழனின் உரிமை கோரி போராட்டம் செய்ய கூடிய இரு ஜாதிகளை வி.சி.க , ப.ம.க என்று கட்சிகளாய் பிரித்து ஜாதி சண்டையில் மோத விடுவது, 
அதை வைத்து சமத்துவம் பேசி திராவிடம் வளர்ப்பது.

இதுதான் திராவிடர்களின் முழுநேர அரசியல், பிழைப்பே !

மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறந்துதானே இருக்கிறது, அதற்க்கு ட்ராவிடம்தானே காரணம் என்று சப்பைக்கட்டு கட்டுவோர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், ஆரிய ஆட்சியில் இருக்கும் வட மாநிலங்களும் தமிழகமும் ஒன்றல்ல.

திராவிட ஆட்சியையும் மீறி சிறப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். 

ஒன்றிரெண்டு நல  திட்டங்களை கூட கொண்டு வராமல் தமிழகத்தில் கட்சி நடத்த முடியாது. 

இந்திய / திராவிட ஆட்சிக்கு பதில் தமிழருக்கு சுயாட்சி இருந்திருந்தால் உங்களை போல் போலியாக இல்லாமல் உண்மையான சமத்துவத்துடன் ஆரியத்தை எதிர்த்து ஜாதி வேற்றுமை இல்லாமல் வள்ளுவத்தின் படி வாழ்ந்திருப்போம். 

ட்ராவிடம்தான் ஜட்டி போட்டுவிட்டது என்று மீண்டும் சொன்னால் தொல்காப்பியத்தாலேயே  அடித்து கொள்வோம் உங்களை.

திராவிட கட்சிகள் இணைய வேண்டும் என்று எப்போது வைகோ கூவினாரோ (தன்னையறியாமல் மேலோங்கும்  திராவிட இனப்பற்று), அப்போதே தமிழ் தேசியம் வளர்ந்துவிட்டது. 

தாழ்ந்த ஜாதி என்ற அச்சம் எல்லாம் திராவிட அரசியலில்தான், 

தமிழ் தேசியம் ஜாதியை ஒரு தமிழின அடையாளமாக பார்க்குமே தவிர, பணிபுரியும் இடத்திலோ, கல்வி நிலையங்களிலோ, காதல் திருமணங்களிலோ ஜாதியை பொருட்படுத்தப்போவதில்லை. 

வெளி உலகில் திறந்து விடப்பட்ட சாதாரண விஷயமாகவே ஜாதி இருக்க வேண்டும். அப்போதுதான் அதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியும், இதுவே உளவியல் ரகசியம். பெரியாரின் சிந்தனைகள் இதற்க்கு நேர் மாறாக இருந்தது காரணமாகத்தான்.

ஹாலிவுட் நடிகர் Morgan Freeman சொல்வது போல் "The way to stop racism is to stop talking about it". 

வந்தேறிகளுக்கு சவாலாக இருந்த ஜாதிகள்தான் இப்போது மிகவும்  தாழ்ந்த ஜாதிகளாக ஒதுக்கப்பட்டுள்ளன. 

காலம் காலமாக நிலத்தை ஆண்டு விவசாயம் செய்து சோறு போட்டவன் இன்று நிலமில்லாமல் தவிக்கிறான். கோவிலில் ஆன்மிகம் கற்பித்த பண்டிதர்களுக்கு இப்போது கருவறையில் அனுமதி இல்லை. 

நோயை குணப்படுத்திவிட்டால் மருத்துவமனைகள் எப்படி லாபம் பார்க்கும் என்பது போல, இடைநிலை ஜாதிகளுக்குள் மோதலை வளர்த்து விடுவதும் தமிழர்களை ஓர் இனமாக நிற்க விடாமல் அரசியல் செய்வதும் தான் திராவிட ஆட்சி.

பொருளாதார சமநிலையில் ஜாதி வெறும் வரலாற்று அடையாள பேராக மட்டுமே இருக்கும். 

தமிழினம் ஒன்றுபட்டால் திராவிடம் செயலற்று போகும்.  தமிழ் தேசியம் தற்சார்பு பொருளாதாரத்தை முன்வைக்கிறது. 
குளங்கள் சீரமைப்பு, மேய்ச்சல் நிலங்களை உருவாக்கல் , ஆடு மாடு மேய்ப்பதை அரசாங்க தொழில் ஆக்குதல், மருத்துவம் கல்வி ஆகியவற்றை முற்றிலும் இலவசம் ஆக்குதல் (கியூபா போல்). கள் உற்பத்தி, மேல்நாட்டு மதுபானத்தை ஒழித்தல், கஞ்சாவிலிருந்து ஒரு முழு பொருளாதார புரட்சியையே உருவாக்குதல் போன்ற நவீன சிந்தனைகளை கொண்டுள்ளது.

அப்துல் கலாம் வசனம்,  சமுத்திர கனி வசனம் கேட்டெல்லாம் சமூகம் மாறாது,  பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும்

தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்பது இனவாதம் என்றால், இந்தியா கூட சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் கை  கோர்த்து சமத்துவ அரசியலை ஆரம்பிக்கலாமே. தேசியவாதம் தவறில்லை, இனவாதம் தவறா  ?

திராவிட கட்சிகள் என்றாவது  தனித்தமிழ்நாடு  கேட்டதுண்டா?  உலகம் முழுக்க பரவியிருக்கும் இனத்திற்கு ஒரு நாடு அவசியம் அல்லவா ? இங்கு தமிழ்நாட்டிலேயே வேற்று இனத்தவரின் நலனுக்காகத்தான் அரசியல் நடக்கிறது. தமிழன் தன் பழைய வரலாற்றை மீட்டெடுக்க கூடாது என்பதுதான் திராவிடரின்  கொள்கை. அதற்கேற்றாற்போல் தலித் என்ற அடையாளத்தை பிடித்து தொங்கி, விளைவாக திராவிட வலையில் மட்டுமில்லாது இந்திய தேசியவாத வலையிலும் சிக்க்கிக்கொள்கிறார்கள்.

நம் பாரம்பரிய சித்த மருத்துவம் என்பது தமிழின் ஒரு அங்கம்.அதை யார் மறுத்தாலும் எள்ளி நகைத்தாலும் தமிழர்கள் அனைவரும் அதை காக்க வேண்டும். நாம் குடிக்கும் நிலவேம்பு கஷாயம்  திராவிடற்கு  விஷமாக அமையும். 

திராவிடம் என்பதே ஆரிய பயன்பாட்டில் உள்ள ஒரு வார்த்தை தான். 

திராவிட நாடு
என்று பேர் வைக்கலாமா தமிழ் நாடு என்று வைக்கலாமா என்ற கேள்வி வருவதே அதிகாரத்தில் இருக்கும் வந்தேறிகளால்தான். தமிழர் நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கவே சங்கரலிங்கனார் என்ற தமிழன் உயிர் தியாகம் செய்யவேண்டியிருக்கிறது.

 200 வருடங்களுக்கு முன் சொல்லாடல் இல்லாத திராவிடம்,  தமிழகத்தில் மட்டும்தான் செல்லுபடி ஆனது, அதுவும் தமிழனின் முதுகில் குத்த பயன்படும் கருவியாக. 

திராவிட கட்சியின் ஆணிவேரான நீதி கட்சியே ஆங்கிலேயரின் ஆட்சியில் ஆரியர்கள் முன்னுரிமை பெருவதை பொறுக்காமல் தெலுங்கர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சிதானே. 

நமது  பகை பக்கத்து மாநில மக்கள் அல்ல, தமிழர் பெயரில் தமிழரை ஏமாற்றும் திராவிடர்களே.

கேரளா கன்னியகுமாரியில் குப்பையை கொட்டுகிறது , 

கர்நாடக கழிவு நீரை காவிரியில்தான் கலக்கிறது, 

நீங்கள் டார்வின் பெயரை சொல்லிக்கொண்டு அறிவாளி என்று சுற்றுவது, Dawkins பெயரை சொல்லிக்கொண்டு கடவுள் மறுப்பு பேசுவது, Karl marx'கு  பிறந்தநாள் வாழ்த்து சொல்வது எல்லாம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் போலித்தனம். 

நிலவேம்பு கஷாயம் ஏதோ சிலருக்கு உயிர் காக்கும் மருந்தாக பயன்படுகிறது, அதை கேலி செய்து உங்கள் அறிவியல் ஆற்றலை நிரூபிப்பதாக நினைத்து கோமாளி ஆகவேண்டாம்.

அல்லோபதி மருத்துவத்தில் டெங்குவுக்கு மருந்தில்லைனு அவனே சொல்லிட்டான், காய்ச்சலை கட்டுப்படுத்தி , தானாக platelets count அதிகரித்தால் உயிர் தப்பலாம் என்பதுதான் ஆங்கில மருத்துவம்  அதற்க்கு 40 ஆயிரம் ரூபாய் கட்டணம். 

வீட்டில் பப்பாளி இலை  சாறு குடித்தால் platelets count உயரும். சில தனியார் மருத்துவமனைகளில் கூட பப்பாளி இலை  சாறு capsule வடிவில் தருகிறார்கள். , தற்காப்புக்கு நிலவேம்பு கஷாயம் என்பது தமிழ் மருத்துவம், லட்சக்கணக்கில் மக்கள் இதனால் பயன் பெற்று வருகிறார்கள். 

தமிழர் அடையாளங்களை புறக்கணிப்பவன் திராவிடன் , மீட்டெடுப்பவனே மிழன்.   

Sunday, 15 October 2017

கருப்பு பணம் என்னும் இந்தியனின் பறிபோன கற்பு

நவம்பர் 25, இரவு 8:16

கருப்பு பணம் இரண்டு வகைப்படும்
இரண்டு வகையா ??
முதல் வகை கருப்பு பணம் விஜயகாந்த், அர்ஜுன் படங்களில் வருவது. தூரத்து தேசங்களில், ரகசிய வங்கிகளில், டாலர்களாகவும் தங்கமாகவும், பினாமி பெயரில் சொத்துக்களாகவும் பதுக்கப்படுவது.

உலக வர்த்தக சிக்கலின் போது இந்தியாவை காப்பாற்றியது கருப்பு பணம்தான் என்றார் அகிலேஷ் யாதவ், அவர் சொன்னது இரண்டாம் வகை கருப்பு பணம். 

நம் அரசாங்கம் திடீரென " கணக்கில் வராத" என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்த தொடங்கியது. இது இரண்டு வகையான கருப்பு பணத்தையும் ஒன்று போல குழப்ப அவர்கள் செய்த நூதன உளவியல்.

இங்குள்ள மக்களின் பொருளாதாரம் அமெரிக்காவை போல் துபாய் போல் திடீரென உருவான பொருளாதாரம் இல்லை. இது வங்கிகளை நம்பி வாழும் பொருளாதாரம் இல்லை.  வங்கிகள் நமக்கு தேவைப்பட்டதில்லை, வங்கிகளுக்குத்தான் நாம் தேவைப்பட்டோம், இதுவே வரலாறு.

நாம் GDP கு நன்றிக்கடன் பட்டதில்லை, அது நம் கவலை இல்லை.

மரத்திலிருந்து பழத்தை புடிங்கி சாப்பிடவோ, ஒருவரிடம் முடி வெட்டி கொள்ளவோ, பத்து குழந்தைகளுக்கு பாடம் நடத்தவோ அரசாங்கம் தேவைப்பட்டதில்லை. 

இன்று கழிப்பறை முதல் செருப்பு டோக்கன் வரை கட்டணம் மற்றும் வரி.

நம்மை சில்லறை சில்லறையாக கண்காணிக்க கொண்டுவந்த திட்டமே இந்த டிஜிட்டல் இந்தியா. ஆனாலும் பாருங்க, அதற்கு கருப்பு பண கட்டுப்படுத்தல் என்ற சுண்ணாம்பை பூசியுள்ளார்கள். இந்த ஏமாற்றுவேலையை செய்ய அவர்களுக்கு தேவையான பொருட்கள் இரண்டே இரண்டு.

1. தேசப்பற்று
2. ஜனநாயகம்.

தேசப்பற்று சுலபமாக மக்களை மந்தையாக்கி கட்டுப்படுத்திவிடும். அது முற்றிலும் அச்சங்களையும் (வறுமையில் விழுந்துவிடுவோமோ என்ற பயம்) ஆசைகளையும் (பெரிய பணக்கார பிரபலமாகலாம் என்ற ஆசை) கொண்டு செயல்படுவது. பிரதியின் பிரதியியாக மீள முடியாத நிழலாக மக்களை மாறிவிடுவீர்கள்.

நம்  உயிரியளவுகள் தகவல் (biometric information) பணத்தை விட மதிப்பு மிக்கது.

கணக்கில் வராத என் பணத்தையும், கணக்கில் வராத உங்கள பணத்தையும், கணக்கில் வராத அம்பானியின் பணத்தையும், மல்லய்யாவின் பணத்தையும் ஒன்றாக சமமாக கருப்பு பணம் என சாடுகிறது ஒன்றிய அரசு.

மோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய போது, பெரிய கார்பொரேட் முதலைகள் சிறையில் அடைக்கப்படுவது , சுவிஸ் வங்கியிலிருந்து பணம் வெளிவந்து நம் ஒவ்வொருவரின் கையிலும் குவிதல் போன்ற வாக்குறுதிகளை கொடுத்தார்; அதுவே நமக்கு காட்டப்பட்ட கனவு, அல்வா, அல்லவா ? 

அனைவரும் வரிசையில் நின்று நம் கையிருப்பு பணத்தை வங்கிகளில் செலுத்தி , அதை எப்படி திரும்ப பெறலாம் என்று ஏங்கி நிற்பது போல் என்றாவது கனவு கண்டீர்களா ?

காலாகாலமாக நாம் பின்பற்றிய பொருளாதாரம், சேமிப்பு பழக்கம் அனைத்தும் ஓரிரவில் சிதையுண்டது. வங்கியின் கணக்கில் வரவில்லை என்பதால் ஒருவர் தன் வீட்டில் கால காலமாக சேர்த்து வைத்துள்ள பணம் கருப்பு பணமா ? 

அமெரிக்காவில் வங்கிகள் சுருண்டு விழுந்த போது , பொருளாதாரமே விழுந்தது, மக்கள் விழுந்தனர், அமெரிக்காவே நிலை தடுமாறியது. இந்தியாவில் அப்படி நடக்காது, நமக்குத்தான் சுயமாக ஒரு பொருளாதாரம் உள்ளதே, அதுதான் இன்று கருப்பு பணமாக அரசால் சாடப்படுகிறது.(வகை 2)

நீங்கள் தவறு செய்யவில்லை என்று உங்களுக்கு தெரியும், பின் ஏன் வரிசையில் நின்று, காண்காணிப்புக்கு உள்ளாகிறீர்கள் ?  

சில சிறு வணிகர்கள் தவறு செய்திருக்கலாம், ரசீது தராமல் பணம் சேர்த்திருக்கலாம், கார் வாங்கியிருக்கலாம், இல்லை என்று சொல்லவில்லை ஆனால் பெரிய குற்றவாளிகள் அரசின் அரவணைப்பில் தான் உள்ளனர். 

ஒரு நாளொன்றுக்கு 32 ருபாய் செலவுக்கு கீழ் வாழ்பவர் மட்டும்தான் வறுமையில் இருக்கிறாராம். 

மக்கள் பெரும்பாலானோருக்கு சாதாரண செல்போனில் நேரம் மாற்ற கூட தெரியாது, தவறாக ATM பயன்பாட்டிலோ, மொபைல் பயன்பாட்டிலோ பதினைந்து ரூபாயை சுலபமாக இழந்து விட வாய்ப்பிருக்கிறது. 

ஜனநாயகம் என்பது மக்களுக்கு வேண்டியதை மக்களே தேர்வு செய்து கொள்ளும் உரிமைகளை அளிப்பது.

வரிசையில் நின்று நீ குற்றமற்றவர் என்று நிரூபித்து விட்டு போ என எப்படி சட்டத்தை பாய்ச்சலாம் ??  

டிஜிட்டல் இந்தியா என்னும் தூண்டில் புழு

நவம்பர் 8, இரவு 8:30

"500, 1000 தாள்கள் செல்லாது" 
அறிவிப்பை கேட்ட அடுத்த நிமிடம் மக்கள் அதை எங்கும் வாங்க மறுத்தனர்.

எதற்காக இந்த சட்டம், என்ன பயனுக்காக என்று கூட தெரியாத நேரம் அது.

நள்ளிரவு 12 க்கு பின் நம் கையில் இருக்கும் பணம் செல்லாது.

பணம் அவமதிப்புக்குள்ளானது.

பின் இது கருப்பு பண ஒழிப்பு என்று தெரியவந்தது, ஜெய் ஹிந்த் !

டிஜிட்டல் இந்தியா  என்னும் வலையை படிப்படியாக அரசாங்கம் விரித்ததை நொடி நொடியாய் மக்கள் கண்டார்கள்.

நவம்பர் 12 , இரவு 11:03

நிலத்தை அபகரி, முதலாளித்துவத்திற்கு முட்டு குடு, ரேஷன் கடைகளை மூடு , அணு உலை ஒப்பந்தம் போடு.

நவம்பர் 13 , மாலை 6:54

விற்பனை வரி, கேளிக்கை வரி, கலால் வரி, சுங்க வரி, சொத்து வரி, நில வரி, வாகன வரி, சாலை வரி, 

என்னுயிர் மீது என்னை விட அதிக அக்கறை உள்ளது போல் நீ வாங்கும் தலை கவச அபராதம், வங்கி கணக்கு அபராதம், எல்லாம் மீறி தனியாக ஒரு வருமான வரி. இறுதியில் நமக்கென்ன  கிடைக்கிறது ? அனைவருக்குமான இலவச மருத்துவமோ, சமச்சீர் கல்வியோ கூட  இல்லை. ஆனால் மக்களாகிய நாம் மட்டும் வரிசையில் நின்று கஷ்டத்தில் இருக்கும் வங்கிகளை காப்பாற்ற வேணுமாம்

ஏதோ இத்தனை நாள் இந்த அரசாங்கம், தன் மக்களை சொர்கத்தில் வைத்து அழகு பார்த்தது போலும், மக்கள் அரசை காப்பாற்ற கடமை பட்டுள்ளது போலும் ஒரு நாடகம்.

தேர்தல் பூத் ஸ்லிப் வழங்க வீடு வீடாய் வருவியே அதுபோல் வந்து பழைய நோட்டுகளை புதுசா மாத்தி குடு

நவம்பர் 15 , இரவு 8:20

நாம் நமது வாழ்வாதாரத்தை இழக்கவிருக்கிறோம்.

உலக வங்கியின் கட்டமைப்பில் மக்களை சிக்கவைக்கும் திட்டமே இது. 

நவம்பர் 16, பின்னிரவு 1:17

சுமாரான ஒரு வித்தைக்கே (தேசப்பற்று ) மயங்கி போன நம் மக்களை நினைத்து வருந்துகிறேன். 

நவம்பர் 16, மாலை 5:09

தேசியமயமாக்களுக்கு எதிரான லியோ டால்ஸ்டாயின் கட்டுரைகள்.. 

நவம்பர் 18. இரவு 10:53

கருப்பு பணத்தை அழிக்கும் திட்டத்தை ஆதரிக்கும் நண்பர்களே, இணைய வர்த்தக தளங்களில் மக்கள் இணைய இணைய, அதானி 'க்கு காசுதான்.

சுயமாக திரிந்துகொண்டிருக்கும் இந்தியர்களை உலக வங்கியின் பிடியில் கொண்டுவரும் திட்டமா ? இருக்கலாமே. 

உலக வங்கியின் முதல்வர் மோடியை கூப்பிட்டு பாராட்டியது எதற்க்கோ?

வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்துவதெல்லாம்  ஒரு சாதனையா?

வரிசையில் நிற்பதில் ஒரு ராணு வீரனை போல் பெருமிதம் சிலருக்கு இருக்கலாம், ஆனால் நீங்கள் பங்கேற்கும் இந்த திட்டம், இந்தியாவின் மிகப்பெரும் மோசடியாய்  கூட இருக்கக்கூடும். 

உறுப்பினர்கள் இல்லாமல் வங்கிக்கிளைகள் இல்லை, நமக்காக அவர்கள், நாம் அவர்களுக்காக இல்லை. 

நவம்பர் 20. மதியம் 2:16

இப்போது புரிகிறது ரகுராம் ராஜன் ஏன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று. 

புதியதாய் வந்துள்ள உர்ஜிட் சிங்க் படேல் ஒரு குஜராத்தி , ரிலையன்ஸ் குடும்பத்தில் ஒரு முக்கிய நிர்வாகியாக இருந்தவர்.

நவம்பர் 23, பின்னிரவு 2:03

முதலாளித்துவமே ஜனநாயகம், ஜனநாயகமே  முதலாளித்துவம். மோடியே அம்பானி, அம்பானியே மோடி.

அதே நாள், பின்னிரவு 2: 26

217 வங்கிகளை இணையத்தில் ஊடுருவி நாலாயிரம் மில்லியன் அமெரிக்க டாலர்களை ஆப்பிரிக்காவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் தானம் செய்த, தூக்கிலிடப்பட்ட போதும் புன்னகைத்த ஹம்சா'வை போல் நமக்கு தைரியம் இல்லைதான், ஆனால் ஒரு வங்கி ஊழியர் வேலை நிறுத்த போராட்டம்  கூடவா இல்லை ?

நவம்பர் 23, பின்னிரவு 2:37

வெறும் உண்மை இனி மக்களை கவரப்போவதில்லை. டீ விற்றவர்  பிரதமர் ஆவது போன்ற மனதை இளக செய்யும் கதைகள் தேவை. DIGITAL MARKETING/

ஒரே இரவில் நாட்டை தலைகீழாக்கும் மாமனிதர் கதாநாயகனாக தேவை, 

தேசப்பற்று அடிமைத்தனத்தை ஊக்குவிக்கிறது - டால்ஸ்டாய்.

நவம்பர் 26, காலை 11:01

"மோடியின் நோக்கம் சரிதான், ஆனால் செயல்பாடு முறைதான் தவறாக உள்ளது ", இதையே எத்தனை தடவடா சொல்லுவீங்க.

நீ சில்லறை கிடைக்காமல் அலைந்தால் தான்
வங்கி கணக்கு திறப்பாய்,
இணைய வர்த்தகத்துக்குள் எட்டி பார்ப்பாய்.
வாழ வழியில்லாமல்
டிஜிட்டலாக மாறிவிடுவாய்.

ATM எந்திரங்கள் செயல்படாதது நிர்வாக கோளாறு இல்லை, PayTM தான் சரி என்று உன்னை நம்ப வைக்கும் சூழ்ச்சி.

 உடனே உன் பணம் செல்லாது என்று சொன்னால்தான் பதறி போய் சிந்திக்க நேரமில்லாமல் அடிமையாக வரிசையில்  நிற்போம். மக்களுக்கு நேர அவகாசம் தந்திருந்தால், கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவந்திருக்க முடியாது என்று மோடி சொல்வது உண்மையல்ல.

நவம்பர் 26, இரவு 9:31

சூப்பர் , கருப்பு பணம் ஒழியுமா என்று தெரியாது.. ஆனால் கண்டிப்பாக நாமெல்லாம் டிஜிட்டல் ஆகப்போறோம். 

நம்மை யாரோ கண்காணிப்பது நமக்கு பிடித்திருக்கிறது, நீங்கள் உங்கள் லொகேஷன் செட்டிங்கை ஆன்  செய்ய விரும்புகிறீர்களா ?

கண்காணிப்பு கேமராக்கள் உங்களை வெறிக்க வெறிக்க பார்க்கின்றன.

மழை நீரை யாரும் உபயோகிக்க கூடாது , உங்கள் தண்ணீர் வரியில் அது அடங்காது.

"தமிழ் சிந்தனையாளர் பேரவை"

சொல்லியல் 
etymology 
semantics 

தமிழ் மொழி ஒரு வரலாற்று பெட்டகம் என்று நீங்கள் சொல்வது உலகம் அறியப்பட வேண்டிய ஒரு முக்கிய துருப்பு  சீட்டு. 

Graham hancock,
Robert bauval,
Zechariah sitchin,
Erich von danicken,
Michael cremo,

ஆகியோருக்கு கூட  தெரியாத உண்மைகள் எல்லாம் உங்கள் மூலமாக உங்களின் துணை ஆராய்ச்சியாளர்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.
யாரும் கண்டிராத உண்மைகள் வெளி வர தொடங்கியுள்ளன, மிக்க மகிழ்ச்சி.

உண்மையில் விடுதலை பெரும் சூட்சமம் தமிழ் தேசியத்திற்க்கே இருக்கிறது, உலகின் அனைத்து உண்மைகளும் தமிழ் மொழியில்தான் உள்ளது.

ஜனநாயகத்தை கட்டியமைத்த Edward Bernays போல மக்களை கட்டுப்படுத்தும் யுக்தி தமிழ் தேசியர்களிடம் இல்லை.

ஆனால் நம் எல்லோரையும் மீறி இங்கு தமிழ் மொழி தான் நம்மை செயல்படுத்துகிறது என்ற உண்மையையும்  உணருகிறேன்.

இப்படித்தான் மரீனா புரட்சியின் போதும், தமிழ் உணர்வு அனைவரையும் ஒன்று சேர்த்து.

அரக்கர்கள் Syndrome எனப்படும் விசித்திர மன நோய்

திராவிடம் கடவுள் மறுப்பு கொள்கையுடையது, ஆனால் தமிழ் வரலாற்றில் ஆயிரம் வருடம் பின் சென்றால் எந்த சோழன், பாண்டியனாக இருந்தாலும் இறை வழி...